பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலுவைத் தொகையை செலுத்தாதன் காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார கட்டண நிலுவைத் தொகை 877,741 ரூபா என ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த மின்சார துண்டிப்பின் காரணமாக குப்பி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அத்துடன் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை எனவும் டிக்கெட் வழங்குவதற்கு குப்பி விளக்குளை பயன்படுத்துவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
கடந்த 24ஆம் திகதி ரயில்வே திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்ட போதிலும் ரயில் நிலையத்தில் மின்சாரம் இன்று வரை துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தகவலின் படி இன்று 12 .30 மணியளவில் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கான மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது