அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பேச்சு சுதந்திரத்தினை இல்லாமல்செய்யும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் வடகிழக்கில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
வடகிழக்கு இணைந்ததாக நீண்டகாலமா வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் செயற்பட்டுவரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகள் மந்த கதியில் இருந்தமை தொடர்பிலும் எதிர்காலத்தில் வினைத்திறனுடன் கொண்டுசெல்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு சாறிகள் சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Home பிரதான செய்தி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பேச்சு சுதந்திரத்தினை இல்லாமல்செய்யும்!