பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட 16 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்

0
156

பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபால்  மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்துக்கிடமான  பொம்மைகள் கொண்ட பொதிகள்  மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில்  சூட்சுமமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு 7 பொதிகளை  சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருட்களில்  4,673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகளும்   அடங்குவதாக  சுங்கத்தினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள்  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.