பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொம்மைகள் கொண்ட பொதிகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு 7 பொதிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருட்களில் 4,673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகளும் அடங்குவதாக சுங்கத்தினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.