பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: வெளிவந்தது வர்த்தமானி!

0
226

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
1979ம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதனை ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு மற்றும் சிகிச்சையளிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அதற்கான உழைப்பும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.