கொட்டபொல ஹிகுருபானகல பிரதேசத்தில் உள்ள நீர்வழிந்தோடும் வடிகான் ஒன்றின் கீழ் இன்று காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நில்நதிகம, பொருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய தில்ஷான் சதுரங்க என்ற திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெனியாயவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் செல்லும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக இவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.