பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய IPL போட்டியின் போது மௌன அஞ்சலி

0
44

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியின் போது, ​​பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,வீரர்கள் கறுப்பு கைப்பட்டிகளை அணிந்து விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும் பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

மேலும் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் குறித்த போட்டியின் போது, பட்டாசுகள் வெடித்தல் மற்றும் சியர் லீடர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.