பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்களின் வரைபடத்துடன் குஜராத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது

0
79

பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்கள், கட்ச் பகுதி வரைபடங்களுடன் குஜராத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கட்ச் மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரது பையில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கிராமங்களின் வரைபடங்கள், பல்வேறு கருவிகள், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன.

விசாரணையில் அவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அவரிடம் மாநில போலீஸார், மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலுள்ள ரபார் தாலுகா லோட்ரானி கிராமம் அருகே குடா சோதனைச் சாவடி பகுதி அருகே தினேஷ் வந்தபோது மாநில உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.