பாகிஸ்தான் 6 அணிகள் இடையிலான சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) ரி20 போட்டி இன்று ஆரம்பமாகி மே 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல். இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் நிலையில் பி.எஸ்.எல். போட்டி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்துள்ளார்.
இது போட்டிக்கான சரியான சூழல் கிடையாது. என்றாலும் பி.எஸ்.எல். தங்களது ரசிகர்களை கவரும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.