முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்விகற்கும் உயர்தர மாணவன் கௌரிதாசன் கரிஸ் நேற்று முன்தினம்
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீதியில் வைத்து மாணவன் மீது இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமான தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார். மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.