பாடசாலை மாணவர்களுக்கான
மருத்துவ பரிசோதனை

0
264

களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார பணிமனையினால் பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வருகிறது.

பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் உடல் உள நலன்கள் பரிசோதிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம்01, தரம்4,தரம்7,தரம்10 ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் நிறை,உயரம்,கண்,பல்,கை நகங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இன்று பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான கே.இளங்கோவன்,எஸ் எஸ்.ஜீவிதன்,ரி.கஜானன் ஆகியோர் கலந்து கொண்டனர்.