பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்பு

0
135

எதிர்வரும் நாட்களில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள் கட்டுப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக 50 கிலோகிராம் எடை கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.