பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு

0
4

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன, மேலும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வௌிவந்திருந்தன.