பார்வையற்றோரின் பிரச்சினைகளை தீர்க்க, முழுமையான ஆதரவு வழங்கப்படும் : ஜனாதிபதியின் செயலாளர்

0
159

பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க, ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, கொடி அணிவிக்கப்பட்டது.
இதன் போது, ஜனாதிபதி அலுவலக செலவில், பார்வையற்றோருக்கு 300 வெள்ளை பிரம்புகளை கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,
பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க, முழுமையான ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட, பார்வையற்றோர் தேசிய சங்க செயலாளர் பிரசன்ன விக்ரமசிங்க,
இந்த சங்கம், அனைத்து மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், பெண்களுக்கான மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் ஒரு கிளையாக, பார்வையற்ற பெண்களின் சங்கமும், மாற்றுத்திறனையுடைய இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்க, இளைஞர் சங்கமும் இயங்கி வருவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், இலங்கை தேசிய பார்வையற்றோர் சங்க தலைவர் கமல்சிறி நாணயக்கார மற்றும் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.