பாவனைக்கு பயன்படுத்த முடியாத
குளிர்பான போத்தல்கள் கைப்பற்றல்

0
233

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற குறைபாட்டுக்கு அமைய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு நகர் பகுதி வர்த்தக நிலையங்களில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் பொது மக்களை ஏமாற்றும் முறையிலும், பிழைவழி உய்க்கும் முறையில் சுட்டுத்தூண்டில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, தொகுதி இலக்கம் என்பவற்றை வேறாக இட்டு உற்பத்தி செய்து களஞ்சியப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணவு சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரி இ .உதயகுமார் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.