பின்னவலை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தில், இரண்டு மாடி கட்டடம் திறப்பு!

0
71

பலாங்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட, பின்னவலை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடம், இன்று, மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

21.47 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கட்டடம், உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் ஞானபிரகாசம் தேவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிய எல்லாவலவின் அழைப்பின் பேரில், கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திஷாநாயக்க ஆகியோர் பங்கேற்று, கட்டடத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில், வலய கல்வி பணிப்பாளர், கோட்டா கல்வி பணிப்பாளர், இம்புல்பிட்டி பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் பங்கேற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.