பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!

0
48

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.அத்துடன் இந்திய அரசாங்கத்தின் ஊடாக நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.