பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்த கலந்துரையாடல்!

0
8

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று (13) கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை எனவும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும்  பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்கள் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை தனியாக பார்க்காமல் முழுமையான செயல்முறையாகப் பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.