பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. அதனை தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்ட 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதேவேளை, கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டாவது முறையாகவும் அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து கோப்ரா கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில், புதிய ஆா்ப்பாட்டக் கூட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், புலம்பெயர்தலுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் மற்றும் அவா்கள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.