பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகளைத் தாக்கிய நால்கே புயல்!

0
139

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய கடும் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதாகவும்இ புயல்இ மழைஇ வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.