பிலியந்தலையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

0
41

பிலியந்தலை, மாம்பே பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை (22) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார். 

சந்தேக நபரிடமிருந்து  1,400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.