கல் ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதம் கித்துல் உதுவ பகுதியில் இன்று தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் – அக்போபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 17 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தோரில் மூன்று ஆண்களும், ஒரு சிறுவனும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.