அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான புகையிரத மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.
62 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த புகையிரத மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட புகையிரத மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்க முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.