இன்று முதல் 42 புகையிரத பயணங்களை இரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகையிரதங்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை 42 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.