முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று, இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.