புதிய வரிகள் நாட்டில் அறிமுகமாகும்!

0
200

எதிர்காலத்தில் மேலும் சில புதிய வரிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நிலைமை தொடர்பில் அவர் விடுத்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

“இந்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு மிகவும் கடினமான காலமாகும். எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசைகளில் நிற்பது தெரிகிறது. தற்போது சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து, 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்கப்படுகிறது. இந்த எரிவாயு மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் தகன சாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

அடுத்த எரிவாயு கப்பலில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவைப் பெற முடியும். இதற்கு 14 நாள்கள் ஆகும். ஆனால், ஒரு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.

எரிபொருளைத் தொடர முடிவு செய்தோம். ஆனால், தற்போதைய தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே தக்கவைக்க முடியும். மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பல அத்தியாவசிய சேவைகளுக்கும் இது முன்னுரிமை அளிக்கிறது.

எங்களிடம் 7 நாள்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளது. ஆனால், இம்மாதம் 16ஆம் திகதி 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை (இன்று) வந்தடையவுள்ளது.

மேலும், பெற்றோல், டீசலுக்காக இரண்டு எரிபொருள் தாங்கிகள் வாங்கப்படவுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இந்த மாத இறுதிக்குள் எரிபொருள் தாங்கிகளை கொள்முதல் செய்ய உள்ளோம். அடுத்த மாதமும் இரண்டு எரிபொருள் தாங்கிகளையும் வாங்கவுள்ளோம். இதன்பின், இந்தியாவுடன் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தின்படி, 4 மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இந்த எரிபொருள் 50 சதவீத தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எரிபொருளைப் பெறும்போது எங்களுக்கு வெளிநாட்டு நாணயப் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னையைப் பற்றி பேசினால் ஓர் அரச வங்கியிலும் ஒரு ரூபாய் இல்லை. பின்னர் அமைச்சரவைக்குச் சென்று பணத்தை அச்சிடுவதற்கான ஒப்புதலைப் பெற்றேன். இதனால்தான் புதிய வரி விதிக்கப்பட்டது. மேலும் பல வரிகளும் விதிக்கப்படவுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரவும், அன்னிய கையிருப்பு பிரச்சனையை போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகின்றோம் – என்றுள்ளது. (ஐ)