புதுக்குடியிருப்பில் புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது!

0
331

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய, புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று புதையல் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரைக் கைதுசெய்ததுடன், புதையல் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்கிளாய் பகுதியினைச் சேர்ந்த மூன்று பேரும், ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதிகளைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து புதையல் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருப்படும் இயந்திரம், மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு உந்துருளிகள், கார் ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.