29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தீப் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததோடு, சம்பவத்தை அவதானித்த இரு யுவதிகளும் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு, தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தீ விபத்துத் தொடர்பில் நிலைமைகளைப் பார்வையிட ஊடகங்களுக்கு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles