புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

0
8

பதுளையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை வேவெல்ஹின்ன பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் புதையல் தோண்டுவதாக காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 21 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட தம்புல்ல, வேவெல்ஹின்ன, பலகொல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.