புதையல் தோண்டிய 5 பேர் கைது!

0
85

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய 5 பேர் ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சூரியவெவ, ஹத்பொருவ பிரதேசத்தில் புதையல் தோண்டிய 5 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 41 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சூரியவெவ, செவனகல மற்றும் பிபில பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.