புலம்பெயர் அமைப்புகளின் தடையினை
நீக்கியமை அரசின் நாடகம்-த.சுரேஸ்

0
207

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் ஒரு சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையினை நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையானது ஐ.நா.வில் எதிர்வரும் மாதம் கொண்டுவரவுள்ள பிரேரணையில் தங்களை நியாயப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் நாடகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.