பெங்களூரிலிருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.