பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது!

0
370

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல நாட்கள் வரிசைகளில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.