நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் பெற்றோல் 35 ரூபாயாலும், ஒரு லீற்றர் டீசல் 75 ரூபாயாலும் அதிகரித்துள்ளது லங்கா ஐ. ஓ. சி. நிறுவனம்.
இதன்படி, 92 ஒக்ரெய்ன் பெற்றோலின் விலை 338 ரூபாயாகவும் 95 ஒக்ரெய்ன் பெற்றோலின் விலை 367 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், ஓட்டோ டீசலின் விலை 289 ரூபாயாகவும், சுப்பர் டீசலின் விலை 327 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.