பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அனுப்பிவைப்பு

0
173

பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுவரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது.

இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

‘முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும். இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம்.
பெலாரஸிற்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை’ என விளாடிமிர் புடின் தெரிவித்தார்.