பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்தததால் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
“தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.