பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்திற்குள்ளேயே குறுகிய கால தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சுமார் 300 மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், விசேட வைத்திய நிபுணர் M.D. லமாஹேவா குறிப்பிட்டார்.