பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ; போதைப்பொருள்களுடன் 10 பேர் கைது !

0
60

பேருவளை மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலையங்களின் தலைமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

இதன்போது, போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

மீன்பிடி கப்பல்களில் இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.