பேலியகொடை – கலுபாலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உந்துருளியொன்றில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த 32 வயதுடைய நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையிலிருந்து திரும்பியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.