பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் குளத்தடி சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
233

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் குளத்தடி சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று இடம்பெற்றது.

கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் 2002ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவ மாணவிகளால் கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை புனித கங்கையிலிருந்து பக்தர்களினால் புனித நீர் எடுத்துவரப்பட்டு, சனிக்கிழமை எண்ணைக் காப்பு நிகழ்வு இடம்பெற்று நேற்று மஹா கும்பாபிஹேகம் இடம்பெற்றது.

மஹா கும்பாபிஷேகக் கிரியைகள் கும்பாபிஷேக பிரதிஸ்டா பிரதம குரு அலங்கார கிரியாமணி சிவஸ்ரீ எஸ்.மணிவள்ளிகாந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.

இதன்போது கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் 2002 க.பொ.த சாதாரண தர மாணவர்கள், கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.