பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்க தயார்! – சரத் பொன்சேகா

0
14

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய வாயிலான நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தான் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.