30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை பேரணி – வீதியில் ஆணி வைத்து அராஜகம்

திருகோணமலையில் இருந்து காலை ஆரம்பமான பெத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று காலை திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், வீதியில் ஆணிவைத்து மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையில் பேரணியில் சென்ற எட்டு வாகனங்கள் காற்றுப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புல்மோட்டையை அண்மித்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் வீதியை அவதானித்தபோது வீதியில் அதிகளவான ஆணிகள் இறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேரணியில் உள்ள இளைஞர்கள் வீதியில் இறுக்கப்பட்ட ஆணிகளை அகற்றி பேரணியை தொடர்கின்றனர்.

இதேவேளை இன்று காலை பேரணி ஆரம்பிக்கப்பட்டபோது எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles