27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே மக்களுக்கு நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்தவாரம் மிகவும் தீர்க்கமானதாகும். நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles