நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு விவசாய அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையும் மீண்டும் மே மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரையும் பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படவுள்ளன.
மே மாதம் 25 ஆம் திகதி முற்பகல் 4 மணி தொடக்கம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகிய திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.