பொலன்னறுவையில் வீட்டில் தனிமையிலிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

0
4

பொலன்னறுவை – மெதிரிகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.பிரதேச வாசிகள் மற்றும் உயிரிழந்தவரின் மகள் ஆகியோரினால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.