காலி – கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட முயன்றபோது, அவர்கள் பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, 105 ரி-56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.