பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

0
265

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் விசேட சுற்றிவளைப்புகளின் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் இன்று(25) காலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இரண்டு மதுபான சுற்றிவளைப்புகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 133 லீற்றர் மதுபானம், 170 லீற்றர் கோடா, இரண்டு செப்புத் தகடுகள், 4 இரும்புப் பீப்பாய்கள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஐஸ் போதைப் பொருள் இலத்திரணியல் தராசு என்பவற்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.