29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போக்குவரத்து சபையில் தகுதியற்றோருக்கு நியமனம் வழங்க முயற்சி! – சுதந்திர சேவை சங்கம்

இலங்கை போக்குவரத்து சபையில் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுதந்திர சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பந்துல ரத்நாயக்க இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

போக்குவரத்து சபைக்கு கடந்த காலங்களில் உரிய முறையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.2018 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கிடையே இந்த விடயம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தை மீறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத்தை சேர்ந்தோர் சுமார் ஐயாயிரம் பேர் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த செயற்பாடுகளைக் கண்டித்து நாம் விரைவில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles