29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போதகர் ஜெரோம் தாக்கல் செய்த மனு மீள பெறப்பட்டது

தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பாிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​போதகா் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமா்பணங்களை முன்வைத்து மனுவை மீள பெறுவதற்கான அனுமதியை கோாினா்

இதன்படி, மனுவை மீள பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குறித்த போதகருக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுக்காது நிராகாிக்குமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles