போதை குளிசைகளைவிற்ற மருந்தகர் கைது

0
71

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ, பொத்துப்பிட்டிய பிரதேசத்திலுள்ள மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றும் சந்தேகநபர், போதைப்பொருள் விற்பனை செய்வதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில் வஸ்கடுவ பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டு 2500 அட்டைகள் அடங்கிய 250 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.