போராட்டக்காரர்களை முடக்குவது என்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் – சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பு

0
165

நாட்டில் இடம்பெற்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்களை முடக்கும் செயற்பாட்டில், தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று, சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களை முடக்குவது என்பது வெகட்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளையடுத்தே மக்கள் எழுச்சிப் போராட்டமானது வெடித்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே நாட்டில் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தது.

இவ்வாறான நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வந்த நபர், ராஜபக்ஷர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டவர்களை தேடி சென்று கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக போராடியவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வகட்சி போராட்டக்காரர்கள் என்ற ஒரு தரப்பினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

போராட்டக்களத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தவிர ஏனையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை யார் முன்வைக்கின்றனர் என்றே நான்; கேட்கின்றேன்.

கல்வீசினார்கள் என்ற யார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்றே நான் கேட்கின்றேன்.

நாட்டின் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிப்பவர்களே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாடு மோசமான சீரழிவை எதிர்கொள்ளும்வரை அதற்கு பொறுப்பானவர்களுக்கு துணைபோனவர்களே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.